வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (23:00 IST)

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி டி20 உலகக்கோப்பையின் சமன்பாடுகளை மாற்றியிருக்கிறது.

 
தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை இன்றைய போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

 
அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை சந்திக்க இருக்கிறது. அந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டால், இந்திய அரையிறுதிக்குச் செல்வதற்கு ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

 
ஏனென்றால் இந்தியா தோல்வியடையும்பட்சத்தில் 6 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் அணி, ரன் விகிதத்தை அதிகரித்துக் கொண்டு அரையிறுதிக்குச் சென்றுவிடும்.
 
 
பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் போட்டி நடக்கிறது.

 
இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். எனினும் அடுத்து நடக்கும் இந்தியா-ஜிம்பாப்வே ஆட்டத்துக்காக பாகிஸ்தான் காத்திருக்க வேண்டும். இந்தியா தோல்வியடையும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

 
இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
 
இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும்.

 
அடுத்த ஆட்டத்தில் இந்தியா குறைந்தபட்சம் ஒரு புள்ளியையாவது பெற வேண்டும். அதாவது மழையாவது பெய்ய வேண்டும்.

 
பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு 'ஆபத்து'
 
ஏனென்றால் இந்தியாஅதனால் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால் ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அரையிறுதிக்குச் செல்ல முடியாது.

 
ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடக்க இருக்கிறது.