2016ஆம் ஆண்டு நடந்த தேர்வுகளில் ஆறு சீன மாணவர்கள் மோசடி செய்ய உதவி செய்ததை சிங்கப்பூர் ஆசிரியர் ஒருவர் ஒப்புக்கொண்டார். இது மிகப்பெரிய சதி என்று அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். தனித்தேர்வராக தேர்வில் கலந்துக் கொண்ட தன் ஜியா யன், ஃபேஸ்டைம் செயலி (FaceTime) மூலம் கேள்விகளைப் பெற்று பிறகு மாணவர்களுக்கு மொபைல் மூலம் பதில்களை சொல்வார் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் உடலில் மொபைல் ஃபோன்களை...