தொடர்புடைய செய்திகள்
- சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்: தட்டிக்கேட்ட மாணவியை உயிரோடு எரித்த கொடூரம்
- ஜெயங்கொண்டத்தில் சாலை மறியல் – பொன்பரப்பி தாக்குதல் எதிரொலி !
- மனைவியை கொலை செய்து தலையை பைக்கில் எடுத்து சென்ற கணவன்!
- பஞ்சாபிடம் வீழ்ந்தது ராஜஸ்தான்: 10 புள்ளிகளில் 3 அணி
- பஞ்சாப் கொடுத்த 183 இலக்கை நோக்கி விரட்டி வரும் ராஜஸ்தான்
ஐந்தாவதும் பெண் குழந்தை - கோபத்தில் மனைவியை கொன்ற கணவன்
காவல்துறையினரையே திகைப்பில் ஆழ்த்திய கொடூரமான சம்பவம் ஒன்று பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது.
ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் விரக்தியடைந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓரறையில் அடைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் பஞ்சாப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகர் சண்டிகரிலிருந்து சுமார் 81 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனந்த்பூர் சாஹிப் என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 43 வயதாகும் ராகேஷ் குமார், தங்களுக்கு ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக தனது மனைவி அனிதா ராணியை (35) கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவியை கொன்ற பிறகு, கழுத்தை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த ராகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
அடுத்த கட்டுரையில்