ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...
kamal
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக பல வருடங்கள் அறிவித்து பின்வாங்கிய நிலையில் அவரின் நண்பரும் சக நடிகருமான கமல் மக்கள் நீதி மையம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி திடீரென அரசியலுக்கு வந்து எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தார்
. மையம் என்றால் எல்லாவற்றிலும் மையமாக செயல்படுவது. இந்த பக்கமும் செல்லாமல் அந்த பக்கமும் செல்லாமல் நடுநிலை வகிப்பது என விளக்கமளித்தார் கமல்.
எத்தனை நாட்கள் இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்| என்றெல்லாம் பேசினார். மக்கள் நீதி மையத்திற்கு மக்களிடம் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரின் அந்த கட்சியில் போட்டியிட்ட யாரும் சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவையில் கமலே தோற்றுப் போனார்.
அதன்பின் திமுகவிடம் நெருக்கம் காட்டு தொடங்கினார் கமல். அதன் விளைவாக இப்போது அவருக்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் தொடர்பான விழாக்களிலும் அவர் கலந்து கொள்கிறார். கமலின் பிறந்த நாளன்று முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தோடு கமலின் வீட்டுகு சென்று வாழ்த்தினார்.
