1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
  4. Dinakaran and Edappaadi Palanichamy fight

கட்சி அலுவலகத்திற்குள் நுழைய தினகரன் திட்டமா?

admk
கட்சி தினகரனுக்கு ஆட்சி எடப்பாடி பழனிச்சாமிக்கு என்று சமீபத்தில் முதல்வரிடம் சமாதானம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிடிகொடுக்காமல் பேசியதால் தினகரன் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கின்றார்களாம்





தினகரன் தினசரி கட்சி அலுவலகம் சென்று கட்சிப்பணியை கவனிக்க விரும்புகிறாராம். ஆனால் தலைமை அலுவலகத்திற்குள் தினகரனை நுழைய விடாமல் தடுக்க எடப்பாடி ஆதரவாளர்கள் தயாராக இருப்பதால் தினரகன் கட்சி அலுவலகம் செல்ல தயங்குவதாக கூறப்படுகிறது.

மீண்டும் சசிகலா குடும்பத்தினர்களை கட்சிக்குள் நுழையவிடக்கூடாது என்று மூத்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வருகின்றார்களாம். தினகரன் குறித்து எந்த கவலையும் வேண்டாம், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று டெல்லி மேலிடம் கூறிய ஆறுதலால் எடப்பாடி பழனிச்சாமி தைரியமாக இருக்கின்றாராம். ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவான முடிவை தமிழக முதல்வர் எடுத்தால் அவரது ஆட்சி இப்போதைக்கு கவிழாது என்றே கூறப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்
லண்டன் தீவிபத்து: 79 பேர் மரணம், அதிகாரபூர்வ தகவல்