ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:33 IST)

அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால் மாதம் ரூ.35,000: அரசின் அதிரடி அறிவிப்பு!

அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால் மாதம் ரூ.35,000: அரசின் அதிரடி அறிவிப்பு!
அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால் மாதம் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தற்போது போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து அகதிகளாக அந்நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்
 
இந்த நிலையில் உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் அடைக்கலம் தரும் குடும்பத்திற்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது 
 
இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக வெளியேறிய நிலையில் பிரிட்டனில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.