கோளாறு இல்லாமல் நிலவை அடையுமா ஆர்டெமிஸ் 1? – இன்று விண்ணில் பாய்கிறது!

சனி, 3 செப்டம்பர் 2022 (08:42 IST)
நாசாவின் ஆர்டெமிஸ் நிலவு பயண திட்டத்திற்கான முதல் ராக்கெட்டான ஆர்டெமிஸ் 1 இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் ராக்கெட் ஆர்டெமிஸ் 1 கடந்த 29ம் தேதி ஏவ இருந்த நிலையில் எஞ்சின் கோளாறு காரணமாக ஏவுதல் நிறுத்தப்பட்டது.

பின்னர் ராக்கெட்டின் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் நாசா தீவிரமாக ஈடுபட்டது. தற்போது கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆர்டெமிஸ் 1 விண்வெளி பயணத்திற்கு தயாராக உள்ளது.

இன்று ஆர்டெமிஸ் 1 விண்வெளி பயணத்தை தொடங்க உள்ளது. 42 நாட்கள் பயணிக்கும் ஆர்டெமிஸ் 1.3 மில்லியன் மைல்கள் பயணித்து நிலவை அடையும். அங்கு மனிதர்கள் தரையிறங்குவதற்கான பகுதிகள் குறித்து இது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

எல்லாம் காட்டு

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments