ரப்பர் தோட்டத்தில் பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு

வியாழன், 27 அக்டோபர் 2022 (23:18 IST)
இந்தோனேஷியா நாட்டில், ஜாம்பி என்ற  பகுதியில் வசித்து வந்தவர் ஜஹ்ரா(52). இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று அங்குள்ள பிரபலமான ஒரு ரப்பர் தோட்டத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார்.

அன்று மாலை அவர் பணி முடிந்து வீட்டிற்குச் செல்லவில்ல்லை என்பதால்  உறவினர்கள் இதுகுறித்து தோட்டத்திற்கு வந்து கேட்டும், உறவினர்கள் வீட்டுகளிலும் விசாரித்து, தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்,  ரப்பர் தோட்டத்திற்கு அருகில் ஒரு 16 அடி நீளம் மலைப்பாம்பு உடல் பருமனுடன் எதோயோ விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது. ஒருவேளை பெண்ணை மலைப்பாம்பு விழுங்கியிருக்கலாம் என சந்தேகம் அடைந்த உறவினர்கள், அதன் வயிற்றைக் கிழித்துப் பார்த்தனர்.

அதற்குள், ஜஹ்ரா பிணமாகக் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். இந்தச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் அந்த நாட்டில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 Edited by Sinoj

 

எல்லாம் காட்டு

திடீரென அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்த முதல்வர் விஜய்!. வைரல் போட்டோ...

செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன் ஜாமீன்!.. தவெகவுக்கு பின்னடைவு!...

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை: சிறுவனின் ஆணுறுப்பு அகற்றம், மருத்துவர்களின் ஆடியோவால் பரபரப்பு

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு.. என்ன நடந்தது?

திமுக - தவெக கூட்டணி: திருமாவளவனின் அதிரடி பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments