வாக்காளர்களுக்கு பணம் : அதிமுகவினர் பாஜகவினர் கைது!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 3 ஏப்ரல் 2021 (14:49 IST)
கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு. 

 
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவுகிறது.  
 
கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு. மேலும், ரூ.46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 12 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதோடு, புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் விநியோகம். இதனால், அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் பழனி, சதாசிவம் ஆகியோர் கைது. 

எல்லாம் காட்டு

ஜூலை 15-ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: எவ வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுகவின் 59 இடங்கள் வெற்றிக்கு விசிகதான் காரணம்: திருமாவளவன் அதிரடி பேச்சு

தனியார் பள்ளிகளை மிரட்டி ரூ.200 கோடி மோசடி: திமுக பிரமுகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நாளை கரூரில் முதல்வர் விஜய்!. என்னென்ன ஏற்பாடுகள்?.. வாங்க பார்ப்போம்!..

முதல்வரின் டேபிளில் தூங்கும் விசிகவின் 2 கோரிக்கைகள்!. அப்செட்டில் வன்னி அரசு!...

அடுத்த கட்டுரையில்
Show comments