திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:27 IST)

சிறையில் கைதிகளுடன் மாஸ்க் தயாரிக்கும் நடிகர் ! பாராட்டும் திரையுலகம்!

மலையாள நடிகரான இந்திரன்ஸ் கேரளாவில் உள்ள சிறையில் கைதிகளுடன் இணைந்து மாஸ்க் தயாரித்து வருகிறார்.

மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தேசிய விருது உள்ளிட்ட அனைத்து விருதுகளையும் பெற்றவர் இந்திரன்ஸ். ஆனால் இவர் சினிமாவுக்கு ஒரு காஸ்ட்யூம் டிசைனராகதான் அறிமுகமானார்.

இந்நிலையில் இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஜப்புரா சென்ட்ரல் ஜெயிலில் மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறைக் கைதிகளுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார். இது சம்மந்தமான வீடியொவை மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர இந்திரன்ஸுக்கு அனைவரும் பாரட்டு தெரிவித்து வருகின்றனர்.