வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 2 பிப்ரவரி 2015 (07:50 IST)

அவல்புட்டு

தேவையான பொருட்கள் :
 
அவல் - 1 கப்
துறுவிய வெல்லம் - 1 கப்
துறுவிய தேங்காய் - அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
நெய் - 1 தே‌க்கர‌ண்டி
முந்திரிப் பருப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1 தே‌க்கர‌ண்டி
உப்பு - அரை தே‌க்கர‌ண்டி
கேசரி மஞ்சள் கலர் - 2 சிட்டிகை
ஏலக்காய் பொடி - அரை த‌ே‌க்கர‌ண்டி 
 
செய்முறை :
 
அவலை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து கரகரப்பாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். அ‌தி‌ல் ‌சி‌றிது உப்பு, கேசரி பவுடர் சேர்த்து கலந்த இளம் சூடான தண்ணீரை தெளித்து பிசிறி வைக்கவும். துவரம் பருப்பை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து தண்ணீரை வடித்து, பருப்பை ஈரமில்லாமல் பிழிந்து தனியே வைக்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறு‌த்து எடு‌க்கவு‌ம்.
 
ஒரு வாணலியில் வெல்லத்தைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டுச் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மறுபடியும் வாணலியைக் கழுவி அதிலேயே வெல்லக் கரைசலைக் கொட்டி, பாகுவரும்வரை கிளறவும்.
 
இளம் உருண்டைப் பாகு வரும்போது தேங்காய்த் துறுவல், துவரம் பருப்பு சேர்த்து கலந்து விட்டு பிசறிய அவல் பொடியைச் சேர்க்கவும். நன்றாகக் கிளறி விட்டு, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, நல்லெண்ணெய் சேர்த்து உதிரியாக வரும்வரை கிளறி எடுக்கவும்.