தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? முதல்வரே அளித்த விளக்கம்!

வெள்ளி, 12 ஜூன் 2020 (13:11 IST)
தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படும் என்ற தகவல் உண்மையில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் அச்சத்தை மூட்டும் விதமாக உள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் பாதிப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 70 சதத்துக்கும் மேல் உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே தெரிவித்தததாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.

இந்நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி விளக்கியுள்ளார். அதில் ’தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியாகும் தகவல் உண்மையில்லை. அதுபோல பொய்யான தகவலைப் பரப்பியவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் இன்னும் கொரோனாவின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளவில்லை. சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அதனால், அரசின் உத்தரவை மக்கள் மதிக்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லாம் காட்டு

அண்ணாமலையின் அனல் பறக்கும் விமர்சனம்: சனாதன தர்மம் குறித்த அரசியல் மோதல்

200 யூனிட்டுக்கள் இலவசம்.. 500 யூனிட் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் வரும்? முன்பு எவ்வளவு இருந்தது?

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் விரைவில் பேச்சுவார்த்தை: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்

விஜய்க்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை!.. நானும் அவரும் அப்பா - மகன் போல!.. ராதன் பண்டிட் பேட்டி..

விஜய் சி.எம். ஆவதை தடுக்க உதயநிதியும், பழனிச்சாமி மகனும் பேசினாங்க!.. ஆதவ் அர்ஜுனா பகீர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments