Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் விஜயகாந்த் – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி !

Updated: வியாழன், 17 அக்டோபர் 2019 (08:22 IST)
விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் வர இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகியத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அரசியல் பணிகளில் அதிகமாக ஈடுபடாத தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது விக்கிரவாண்டி வேட்பாளருக்கு ஆதரவாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் விஜயகாந்த் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவாரா என்பது சந்தேகமே. ஆனாலும் விஜயகாந்த் முகத்தைப் பார்ப்பதில் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எல்லாம் காட்டு

ChatGPT-ல் விரைவில் உரையாடல்களை தனியாக லாக் செய்யும் வசதி.. OpenAI அறிவிப்பு..

ராகுல் காந்தி மீது மீண்டும் ஒரு வழக்குப்பதிவு.. குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தினாரா?

அமெரிக்காவால் கைதான வெனிசுலா அதிபரின் புகைப்படம்... 8 மாதங்களுக்கு பின் வெளியாகிறதா?

ஆஸ்திரியா அரச குடும்பத்து இளவரசியை திருமணம் செய்கிறாரா பிலாவல் பூட்டோ? பரபரப்பு தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments