Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி முயற்சி தோல்வி: புதிய கூட்டணியை அமைக்க தேமுதிக முயற்சியா?

Updated: வியாழன், 7 மார்ச் 2019 (21:30 IST)
கடந்த ஒரு மாதமாக அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் பேசி வந்த தேமுதிக, தற்போது தன்னுடைய பிடிவாதத்தால் இரு கூட்டணியிலும் இடம் கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் 4ல் இருந்து 3க்கு இறங்கிய அதிமுக கூட்டணியில் இணைவதைவிட தனித்து நின்று தங்கள் பலத்தை காட்ட தேமுதிக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் தேமுதிக தலைமையில் கமல், சீமான், சரத்குமார் கட்சிகள் இணையவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த புதிய கூட்டணியில் தேமுதிக 20 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் ஏனைய 20 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த கூட்டணிக்கு கமல், சீமான், சரத்குமார் ஓகே சொல்லிவிட்டதாகவும், நாளை விஜயகாந்த் தலைமையில் கூடவிருக்கும் கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
விஜயகாந்த் தலைமையிலான மூன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றாலும் பெரும்பாலான வாக்குகளை பிரித்து இரண்டு கூட்டணியில் ஒரு கூட்டணியை படுதோல்வி அடைய செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.,

எல்லாம் காட்டு

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு..

ஒரு பைசா லஞ்சம் இல்லை.. ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு.. மின்வாரிய ஊழியர்கள் மகிழ்ச்சி...

இனிமே அப்படி பேசமாட்டேன்!.. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்!...

உங்களோட உண்மையான பெயர் என்ன?!.. சீமானை சீண்டிய புளூசட்டமாறன்!..

8வது ஊதியக் குழு.. முக்கிய பணியை முடித்துவிட்ட மத்திய அரசு.. அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments