செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 15 செப்டம்பர் 2021 (14:42 IST)

வேலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை: தொடரும் நீட் பலி!

வேலூரில் நீட் தேர்வு எழுதிய மற்றுமொரு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
 
நீட் தேர்வு எழுதிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சௌவுந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வில் நாம் தோல்வி அடைந்து விடுவோம் என்று அச்சத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவர் +2வில் 600க்கு 510 மார்க் எடுத்தது குறிப்பித்தக்கது. 
 
இந்த நிலையில் இவர் கிங்ஸ்டன் பொறியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுதி இருந்தார். நீட் தேர்வில் தான் தோல்வியடைந்து விடுவோம் என்று பெற்றோரிடம் கூறி அழுத வண்ணம் இருந்த அவர் இன்று புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 16 பேர் நீட் தேர்விற்கு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். நீட் தேர்வினால் தொடரும் மரணத்திற்கு விரைந்து தமிழக அரசு நல்லதோர் முடிவை எடுக்கவேண்டும் என பரவலாக மக்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.