Daily Horoscope

பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு

Updated: புதன், 22 ஜனவரி 2020 (21:36 IST)
பொது இடங்களில் குப்பை கொட்டுவது என்பது தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் நடைமுறை என்பது தெரிந்ததே. ஆனால் இனிமேல் அவ்வாறு குப்பை கொட்டினால் அபராதம் மற்றும் தண்டனை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
 
ஆம், பொது இடங்களில் குப்பையை கொட்டினாலோ அல்லது எச்சில் துப்பினாலோ அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அரசாணை ஒன்றையும் தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
 
இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:  குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனி தனியே கட்டண முறையை அமல்படுத்தப்படும்
 
பொது இடங்களில் குப்பையை கொட்டுவது, எச்சில் துப்புவது, குப்பையை எரித்தல், போன்றவைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும். மேலும் விரைவில் தமிழகம் முழுவதும் இந்த சட்டம் விரிப்படுத்தப்படும்’ என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ஜெயலலிதா கூட இப்படி திமுகவை கடுமையாக விமர்சித்ததில்லை: அரசியல் விமர்சகர்கள்...

விஜய் தொடர்ந்து இதே வேகத்தில் அரசியல் தாக்குதல்களை முன்னெடுத்தால்.. திமுக அவ்வளவு தான்...

சர்க்காரியா கமிஷன்.. நேருக்கு நேர் முதல்வர் விஜய் விவாதிக்க தயாரா? ஆர்.எஸ்.பாரதி

கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் கட்டுப்பாடு தளர்வு!.. மத்திய அரசு உத்தரவு..

திமுகவை ஓட ஓட விரட்டுகிறார் முதல்வர் விஜய்! தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு..

அடுத்த கட்டுரையில்
Show comments