சசிகலாவின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு: புதிய உத்தரவு!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:16 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலா விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
 
தமிழக அரசு இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களை வழங்க உள்ள நிலையில் இதில் வழங்கப்படும் கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
 
இதன்படி அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டு ரேஷனில் பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும் ஒரு கரும்பின் அதிகபட்ச விலை ரூபாய் 33 ஆக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்றும் கரும்பின் உயரம் ஆறு அடிக்கு குறையாமல் கொள்முதல் செய்யப்படும் என்றும் நோய் தாக்கிய கரும்புகள் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது .
 
 
 

எல்லாம் காட்டு

மோடியால் பொருளாதார புயலில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாது!.. ராகுல்காந்தி பகீர்!..

நீட் வினாத்தாள் கசிவில் கைதானவருக்கு 8 ஏக்கரில் பள்ளி கல்லூரி.. சிபிஐ விசாரணையில் அம்பலம்..!

ஆதரவளித்த 25 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை: தவெக அதிரடி முடிவு..!

Dialer Appஐ மாற்றும் கூகுள்.. இனி ஒரே இடத்தில் நார்மல், வாட்ஸ் அப், கூகுள் மீட் call historyஐ பார்க்கலாம்..

பாட்டிலுக்கு 10 ரூபா!.. விஜய் போட்ட ஆர்டர்!.. உண்மை வெளியே வருமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments