Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம்

Written By Arun Prasath
Updated: புதன், 23 அக்டோபர் 2019 (13:10 IST)
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளியில் பொது மக்கள் பட்டாசு வெடிக்கும் நேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதன் படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மக்கள் வெடி வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, மருத்துவமனை, நீதிமன்றம், குடிசை பகுதிகள், புனித ஸ்தலங்கள் ஆகிய பகுதிகளில் வெடி வெடிக்ககூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாசில்லா தீபாவளியை கொண்டாட ஏதுவாக தமிழக அரசு, வெடி வெடிக்க கட்டுப்பாடுகள் அளித்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!.. அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்வு..

உதயநிதியின் கேள்விக்கு விஜய் பதில் சொல்லமாட்டார்!. தீர்மானம் கொண்டுவரும் தவெக?..

Gold Price: மீண்டும் விலை ஏறிய தங்கம்!. இன்றைய அப்டேட்!..

உங்களை ஒரு தலைவன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும்.. உதயநிதி குறித்து குஷ்பு...

2 மணி நேரம் டாய்லெட்டில் இருந்து புரட்சி செய்தவர் உதயநிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments