திருமா வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..

Arun Prasath
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (11:40 IST)
மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை திருமா தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு இடையே மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர உத்தரவை பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் மறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்டவிரோதமானது அல்ல என கூறி சென்னை உயர்நீதிமன்றம் திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தது.

எல்லாம் காட்டு

கட்டணமில்லா பேருந்து வேண்டாம், நேரத்திற்கு வந்தால் போதும்: பேருந்து சேவை குறித்து பெண்மணியின் குமுறல்

திமுக தோல்விக்கு இந்த பேச்சு தான் காரணம்.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் கண்டனம்..!

அரக்கோணம் - செங்கல்பட்டு இரண்டாவது ரயில் வழித்தடம்.. மத்திய அரசு ஒப்புதல்..!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டிய ஈபிஎஸ்.. 17 பேர் மட்டுமே வந்திருப்பதால் பரபரப்பு..!

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பையில் மொபைல் போன் வைத்திருக்க தடை.. தமிழக அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments