Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகள் செயல்பட அனுமதி !

Written By Sinoj
Updated: சனி, 31 ஜூலை 2021 (22:51 IST)
நமது அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் மற்றும் மதுபான பார்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா உருவானது. பின்னர் பல்வேறு நாடுகளுக்கு இத்தொற்றுப் பரவிய நிலையில், இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்தது. தற்போது ஓரளவு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் மேலும் அதிகரித்து வருகிறது.  வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்  தற்போது  ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நமது அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவு நேரக் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விதமான பார்களும் 50% இருக்கைகளுடன் செயல்படலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

நீரை தேக்கிவச்சா வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போய்விடுவோம்!.. டி.கே.சிவக்குமார் கோரிக்கை!...

ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்!.. டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!..

உண்மை தெரியாம தப்பா பேசுறாங்க!.. குடும்பம் பற்றி பேசும் ஜேசன் சஞ்சய்...

கர்நாடகாவில் கனமழை!.. நிரம்பும் அணைகள்!.. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுமா?..

இனிமே இளைய கலைஞர்!.. உதயநிதியை முன்னிருத்தும் திமுக!..

அடுத்த கட்டுரையில்
Show comments