10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

புதன், 2 மார்ச் 2022 (10:27 IST)
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 6ல் தொடங்கி மே 30ல் முடிவடையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5ல் தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 24ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 9 தொடங்கி மே 31 வரை நடைபெறும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும் வெளியாகும்.

எல்லாம் காட்டு

இனப்பெருக்கத்தில் இருந்த சிங்கங்கள்!. அருகில் சென்ற வாலிபர் மரணம்!...

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

காவிரி நீரை உடனே பெறுக; இல்லையேல் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்குக: இபிஎஸ் அதிரடி சவால்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

இனிமே விஜய்தான் தலைவர்!.. தவெகவுக்கு தாவும் திமுகவினர்!.. அதிர்ச்சியில் அறிவாலயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments