தெரிய தொடங்கியது சூரிய கிரகணம்..

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (08:38 IST)
நெருப்பு வளைய சூரிய கிரகணம் தற்போது தெரிய தொடங்கியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு பிறகு பின் நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஊட்டியில் பாதியளவு தெரிய தொடங்கியது. மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலே தெரியும் எனவும் கூறப்படுகிறது.

காரைக்குடி, சிவகங்கையில் 2 நிமிடங்களும்,  திண்டுக்கலில் 2 நிமிடங்கள் 50 வினாடிகளும், கோவை, ஈரோட்டில் 1 நிமிடம் 24 வினாடிகளும், மதுரையில் 2 வினாடிகள் மட்டுமே தெரியக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சென்னையில் காலை 9.34 மணியளவில் சூரிய கிரகணம் பகுதி அளவில் தெரியும் என கூறப்படுகிறது.

எனினும் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!.. திடீர்னு என்னாச்சி?..

திமுகவின் வன்மம் இதுதான்!.. தவெக ஆட்சி தொடரும்!.. மாணிக்கம் தாகூர் பேட்டி...

இனிமேல் ஷாப்பிங் போகும்போது பையை தூக்கிட்டு கஷ்டப்பட வேண்டாம்.. 149 ரூபாய் கொடுத்தால் போதும்.. கேர்மேன் வந்துட்டாரு...!

தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: முக ஸ்டாலின்.. எந்த ஆட்சிக்கும் 6 மாதங்கள் டைம் கொடுக்கனும், அதற்குள் விமர்சிக்க கூடாது: வைகோ.. யார் முதிர்ச்சியான அரசியல்வாதி?

8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியா? தமிழக சுகாதாரத்துறை அளித்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments