எகிறிய மின் கட்டணம்... நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதி!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 17 ஜூலை 2021 (12:58 IST)
ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

 
ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்களுக்கான மின் கட்டணம் கணக்கிடப்பட்டு  2 ஆக பங்கிட்டு இலவச மின்சார அளவு கழிக்கப்படும் என்றும் இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை கழித்துவிட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 
இதனால் ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். முன்னதாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடுவதற்கு பதிலாக மாதாமாதம் கணக்கிடப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. 
 
ஆனால் இது இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இப்போது ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் அதிகமாக வந்திருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, பயனாளரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

எல்லாம் காட்டு

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திமுக முடிவா? அனைத்து கட்சி கூட்டத்தில் ஒப்புக்கொண்டதாக தகவல்...

சென்னை முதல் கன்னியாகுமரி வரை 8-வழிச்சாலை.. மத்திய அரசிடம் நிதி கேட்ட தமிழக அரசு...!

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது... காவல்துறை அதிரடி நடவடிக்கை...!

சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னே தெரியாது.. என்னை பொருத்தவரை மா.சு தான் அமைச்சர்.. சத்யராஜ் பேச்சு.. நெட்டிசன்கள் கிண்டல்...

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments