மக்கள் தொகை குறைவே காரணம் : கல்வி அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு

வியாழன், 8 பிப்ரவரி 2018 (12:51 IST)
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு மக்கள் தொகை குறைந்து வருவதே காரணம் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ள கருத்து நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபத்தில், தமிழகத்தின் அரசு பாடத்திட்டதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் “தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டம் இந்தியாவே வியக்கும் வண்ணம் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் இருக்கும். இதன் மூலம் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு மக்கள் தொகை குறைந்து வருவதே காரணம்” எனக் கூறினார்.
 
நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வரும் சூழலில், அமைச்சர் செங்கோட்டையன் இப்படி கூறியிருப்பதை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

தத்துவம் இல்லாத அரசியல்!.. உங்களை கொன்னு கூட அவன் ஜெயிப்பான்!.. இளவரசு யாரை சொல்றாரு!..

தவெகவுடன் கூட்டணி!.. பக்கா பிளான் போடும் என்.ஆர்.ரங்கசாமி!.. நடப்பது என்ன?..

திமுகவில் இணைய ரூ.500 கோடி பேரம்: ஆடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தவெக எம்எல்ஏ அதிரடி புகார்!

போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு வேட்டை: மூன்றே நாட்களில் 621 பேர் கைது! 296 கிலோ கஞ்சா பறிமுதல்..

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு போட்ட கேரள காங்கிரஸ் அரசு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments