தலைமையை நம்பி அதிமுக இல்லை.. தொண்டர்களால்தான் அதிமுக! – செல்லூர் ராஜூ!

ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (15:24 IST)
அதிமுகவில் பொறுப்புகளில் மாற்றங்கள் தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சிக்குள் அடிக்கடி உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனிடையே கட்சியை மீட்பேன் என சசிக்கலா தெரிவித்துள்ளதுடன் அடிக்கடி அதிமுகவினருடன் பேசி வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் தற்போது செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ”கட்சியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்த்தெடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. இளைஞர்களுக்கு கட்சியில் புதிய பதவிகள், பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும். தலைமையை நம்பி அதிமுக இல்லை. தொண்டர்களால்தான் அதிமுக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments