”ரஜினி பேச்சு, அரை மணி நேரம் கழிச்சி போச்சு ”.. சீறும் சீமான்

Arun Prasath
புதன், 13 நவம்பர் 2019 (13:17 IST)
ரஜினியால் அரை மணி நேரம் கூட தன்னுடைய நிலைப்பாட்டில் நிற்கமுடியவில்லை என சீமான் கூறியுள்ளார்.

ரஜினி ”திருவள்ளுவர் மீதும் என் மீதும் காவி சாயம் பூச முடியாது” என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார். அதன் பிறகு தான் கூறியதை தவறாக புரிந்துகொண்டார்கள் என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”என் மீதும் திருவள்ளுவர் மீதும் காவி சாயம் பூச முடியாத என கூறிய ரஜினிகாந்தால் அரை மணி நேரம் கூட தன் நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை” என கூறினார்

மேலும் ”அவர் பேசிய பேச்சை அவரே பூசி மூழ்கினார்” என சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சீமான் கள அரசியலில் தீவிரமாக களமிறங்கியதிலிருந்து பல மேடைகளில் ரஜினி தமிழர் அல்ல, எனவும், தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது எனவும் பல மேடைகளில் ஆவேசமாக கூறிவந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

நீயே களவாணி!.. நீயெல்லாம் பேசுறியா?!.. விஜயை விளாசிய செல்லூர் ராஜு!..

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் பணியிட மாற்றம்!. தவெக அரசு அதிரடி..

வட இந்தியாவில் மீண்டும் வெளுக்க போகும் மழை.. 18 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

வருத்தத்தில் இருந்த ராதிகா.. ஆட்டோ டிரைவர் சொன்ன அழகான ஆலோசனை... அனுபவம் எல்லாத்தையும் விட பெரியது...

பசுக்கள், கன்றுகளை பொது இடத்தில் வெட்ட அனுமதி!.. தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments