மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை… அடையாளம் கான்பதில் ஏற்பட்ட சிக்கல்!

சனி, 25 செப்டம்பர் 2021 (11:39 IST)
சென்னை கொரட்டூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 16 ஆவது மாடியில் இருந்து 11 ஆம் வகுப்பு மாணவி விழுந்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் வாட்டர் கேனால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 16 ஆவது மாடியில் இருந்து ஒரு மாணவி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது சம்மந்தமாக் போலிஸாருக்கு தகவல் செல்ல அவர்கள் சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். அந்த சிறுமி பற்றி விசாரித்ததில் அந்த அபார்ட்மெண்ட் வாசிகள் சிறுமியை யாரென்று தெரியவில்லை எனக் கூறியுள்ளனர்.

சீருடை மற்றும் பள்ளி பை ஆகியவற்றை வைத்து மாணவி எனக் கண்டுபிடித்த போலிஸார், பையில் இருந்து அவர் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் சொல்லி வரவழைத்துள்ளனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் பள்ளியில் சரியாக பாடம் கவனிக்காமலும் படிப்பில் கவனம் செலுத்தாமலும் இருந்ததால் ஆசிரியர்கள் கண்டித்ததாகவும், அதனால் பயந்து இந்த முடிவை எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

எல்லாம் காட்டு

ஆதரவு மட்டும் வேணும்!. ஆனா தீர்ந்து போன கட்சியா?!.. விஜய் பேசியது சரியா?...

உலகமே உங்கள சுத்திதான் இயக்குற மாதிரி நினைப்பா?!. விஜய்க்கு பழனிச்சாமி பதிலடி...

நாங்கலாம் கோட் சூட் போடக்கூடாதா?.. இதான் காரணம்!.. திருச்சியில் விஜய் அனல் பேச்சு!....

கதறுங்க!. கல்யாண வீட்லலாம் போய் ஏன் பொலம்புறீங்க?!.. திமுகவை நக்கலடித்த முதல்வர் விஜய்..

இந்த விஜய் கேள்வி கேட்பான்!.. சும்மா இருக்கமாட்டான்!.. திருச்சியில் முதல்வர் பேச்சு!..

அடுத்த கட்டுரையில்
Show comments