Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை - எங்கு தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 25 நவம்பர் 2021 (13:12 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. 

 
இந்த நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
ஏற்கனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் ஐந்து மாவட்டங்களில் கூடுதலாக கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மழையின் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எல்லாம் காட்டு

ஆசாத் ஹிந்த் கட்சி!. புதிய கட்சி துவங்கும் சுபாஷ் சந்திர போஸின் பேரன்!..

லார் கிப்பான் குரங்கே எங்கே?.. சியான் விக்ரமுக்கு 3 நாள் கெடு!.. வனத்துறை அதிரடி!...

வி-வடிவ உடற்கட்டை உருவாக்குவது எப்படி: அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகரின் மகன் ஜோசப் பேனா அறிவுரை..

திமுக ஆட்சியின் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ரத்து!.. தவெக அரசு அதிரடி...

பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் முன்னிலையில் வந்தே மாதரம்.. பாராளுமன்றத்தில் இதுவே முதல்முறை..

அடுத்த கட்டுரையில்
Show comments