1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today two districts schools holiday

இரண்டு மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை!

பள்ளிகள்
கனமழை காரணமாக ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என நேற்று அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
 
இந்த எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வேறு எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
குறைய தொடங்கியது தக்காளி விலை! – மகிழ்ச்சியில் மக்கள்!