எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்? - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:59 IST)
தமிழகத்தில் எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 
சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. காலம் காலமாக தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பட்டாசு வெடிப்பது தான் மரபு, ஆனால் உச்சநீதிமன்றம் மாலையில் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும் என அளித்திருக்கும் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆகவே தீபாவளியன்று காலையிலும் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
 
இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. இறுதியில், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி எனக்கூறிய நீதிபதிகள், அந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் எனவும் கூறினர்.
 
அநேகமாக, காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

கிளாம்பாக்கத்தில் பஸ் வரவில்லை என போராட்டம் செய்தவரும் 200 ரூபாய் உபியா? கண்டுபிடிக்க விர்ச்சுவல் வாரியர்ஸ்...

மக்கள் முடிவை தப்புன்னு சொல்ல நீங்க யார்?!.. சிவக்குமார் கேள்வி!...

இன்று ராஜினாமா செய்யும் சித்தராமையா!.. டி.கே.சிவக்குமார் முதல்வராவது எப்போது?..

காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்காமல் போனது ஏன்?!.. எம்.பி. கிறிஸ்டோபர் விளக்கம்!..

டெல்லியிலும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த விஜய்!.. பொங்கும் நெட்டிசன்கள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments