பெங்களூரில் இருந்து கிளம்பும் முன் சசிகலா செய்தது என்ன??

திங்கள், 8 பிப்ரவரி 2021 (09:25 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு சென்னை திரும்பினார் சசிகலா. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் தற்போது அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கிறார்.  பெங்களூரு தேவனஹள்ளி என்ற விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து வருகிறார். 
 
அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றும் அவரது காரின் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது என்றும் காவல்துறை உத்தரவு பிறப்பித்தும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் புறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனிடையே, பெங்களூருவில் இருந்து புறப்படும் முன்பு, அவர் தங்கி இருந்த விடுதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். டிடிவி தினகரனும் மலர் தூவி ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தினார்.

எல்லாம் காட்டு

பினராயி விஜயன் வீட்டில் சோதனை.. ED அதிகாரிகள் காரை அடித்து நொறுக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள்..

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.100 சிறப்பு தரிசனம் ரத்து.. அனைவருக்கும் பொது தரிசனம் தான்...

எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை.. அதிமுக ஒற்றுமையாக உள்ளது: எஸ்பி வேலுமணி விளக்கம்..!

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறாரா சிவி சண்முகம்?!.. நடப்பது என்ன?..

அந்த நிலைக்கு எங்களை தள்ளாதீங்க!.. விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments