ஏமாற்றம் அளித்த பட்ஜெட் - சசிகலா அப்செட்!

புதன், 2 பிப்ரவரி 2022 (15:04 IST)
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து சசிகலா தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

 
நேற்று நாடாளுமன்றத்தில் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளும் வெளியாகிய நிலையில், மக்களுக்கு தேவையான முறையான அறிவிப்புகள் இல்லை என எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து சசிகலா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சாதகங்களும் பாதகங்களும் நிறைந்த கலவையானதொரு நிதிநிலை அறிக்கையாகும். 60 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், டிசம்பர் வரை 1.7 கோடி பெண்கள் உட்பட 5.3 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற வேண்டியுள்ளதாக ஒரு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 
 
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்று அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.     

எல்லாம் காட்டு

அரக்கோணம் - செங்கல்பட்டு இரண்டாவது ரயில் வழித்தடம்.. மத்திய அரசு ஒப்புதல்..!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டிய ஈபிஎஸ்.. 17 பேர் மட்டுமே வந்திருப்பதால் பரபரப்பு..!

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பையில் மொபைல் போன் வைத்திருக்க தடை.. தமிழக அரசு..!

ஆட்சிக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது.. அதற்குள் 60 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்..!

தமிழ்நாட்டில் இனி தொழில் முதலீடுகள் குவியும்.. சர்வதேச வர்த்தக வல்லுநர் கியுங்ஹூன் கிம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments