Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவுநேர ஊரடங்கின்போது நடந்த தொடர் கொள்ளை: திருச்சியில் வியாபாரிகள் அதிர்ச்சி

Written By siva
Updated: வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:56 IST)
தமிழ்நாட்டில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் திருச்சியில் 7 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மூன்றரை லட்ச ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இரவு ஊரடங்கையொட்டி திருச்சி மாநகரில் நேற்று இரவு 10 மணிக்கு முன்பாகவே கடைகள் அடைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்
 
இந்த நிலையில் தேவர்ஹால் என்ற பகுதியில் மூன்று கடைகளில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர். மேலும் தில்லைநகரில் மருந்துகடைகள், செல்போன் விற்பனை கடைகள், துணிக்கடைகளில் புகுந்த கொள்ளையர்கள் 75 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர் 
 
இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளில் ஒருவர் கடைக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் நிலையில் மற்றொருவர் கடைக்கு செல்வது பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

எல்லாம் காட்டு

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

20 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா வரும் தஸ்லிமா நஸ்ரின்.. மேற்கு வங்க பாஜக அரசு வரவேற்பு..

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!

விஜய் போன்ற முதல்வர் எங்களுக்கு வேண்டும்.. விஜய்யே வந்தாலும் சந்தோஷம் தான்.. பீகார் விவசாயிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments