தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: எத்தனை நாட்கள் தெரியுமா?

செவ்வாய், 30 நவம்பர் 2021 (18:33 IST)
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
 
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் குறிப்பிட்டுள்ள கடிதத்தில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டு உள்ளது என்றும் ஆனால் பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையிலுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15 வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் ஆந்திரா கர்நாடகா மாநிலங்களுக்கு பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில் கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது
 
மேலும் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வரும் மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு உதவும் முழு ஒத்துழைப்பு நல்கி ஒரு தோற்று நோய் முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
 
 
 

எல்லாம் காட்டு

2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி செல்லாது: காலம் கடந்து வந்த தீர்ப்பால் என்ன பலன்?

இன்னொரு ராஜ்யசபா தொகுதி.. ஓசியில் பெற்ற காங்கிரஸ்.. 6 மாதங்களுக்கு முன் திமுகவிடம்.. இப்போது தவெகவிடம்..

ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றுவிட்டதா? புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கையால் பரபரப்பு..!

கர்நாடக மாநிலத்திலும் வந்தே மாதரம் முதலிடம்.. மாநில வாழ்த்துக்கு 3வது இடம்...!

பொறியியல் கல்லூரிகளில் 1000 போலி பேராசிரியர்கள்.. 5 வருடங்களாக தூங்கி கொண்டிருந்த திமுக அரசு..

அடுத்த கட்டுரையில்
Show comments