Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழைக்காலத்துக்கு முன் நீர்நிலைகளைத் தூர் வாரவேண்டும் – ரஜினிகாந்த் அறிவுரை !

Updated: சனி, 29 ஜூன் 2019 (12:07 IST)
மும்பையில் தர்பார் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை வந்துள்ள ரஜினிகாந்த் நீர்நிலைகளை அரசு உடனடியாக தூர் வாரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘குடிநீர் பிரச்சனைகளுக்காக எனது ரசிகர்கள் இறங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதனைப் பல ஆண்டுகளாக நாங்கள் செய்து வருகிறோம். இப்போதுதான் அது வெளியில் தெரிகிறது. ஏரிகள், குளங்கள் எல்லாவற்றையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வாறவேண்டும். மழைநீரை போர்க்கால அடிப்படையில் சேமிக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

மும்பையில் பலத்த மழைப் பெய்து வருவதால் தர்பார் படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ரஜினிகாந்த் சென்னைக்கு வந்துள்ளார்.

எல்லாம் காட்டு

முதல்வர் வரும் போது எழுந்து நிற்கவேண்டுமா?!.. சட்டமன்ற விதி சொல்வது என்ன?...

தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை உடனே திறக்க வேண்டும்.. கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு..

செல்லாது செல்லாது!.. தமிழகத்துக்கு தண்ணியை திறந்துவிடுங்க!.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!...

நீட் தேர்வு ரத்தை அடுத்து நெட் தேர்வும் ரத்து.. ராகுல் காந்தி கடும் கண்டனம்...!

டீ குடிக்கும் காசை சேமித்தால் லட்சாதிபதி ஆகிவிடலாம்.. எஸ்பிஐ அறிமுகப்படுத்திய புதிய திட்டம்...

அடுத்த கட்டுரையில்
Show comments