Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறையாத மழை... வீட்டில் முடங்கி கிடக்கும் மக்கள்!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:34 IST)
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டி கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவிழக்கும் மேலும் மழையும் மெல்ல மெல்ல குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
 
கோவை மாவட்டத்தில் 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, வேலூர், கட்டிமேடு, ஆதிரங்கம், பள்ளங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

நிலாவில் ஆராய்ச்சி தளம்!.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா!..

சொத்து வரி ஏறிப்போச்சி!.. தேர்தலில் ஊதியது விசில் இல்ல!.. சங்கு!.. அப்துல்லா விமர்சனம்!...

எம்.ஜி.ஆர் சொன்னார். எங்க தலைவர் செஞ்சிட்டார்!. பன்ச் பேசிய மரிய வில்சன்!...

சட்டசபை நாலு நாளைக்கு லீவு!.. மீண்டும் 17ம் தேதி மானிய கோரிக்கை விவாதம்!...

குறைந்தவிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை நீக்கிய AIRTEL!.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments