பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: தேர்ச்சி விபரங்கள் இதோ:

வியாழன், 16 ஜூலை 2020 (09:02 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த விபரங்கள் சற்றுமுன் வெளியானது. வழக்கம்போல் மாணவியர் மாணவர்களை விட அதிக சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் 7127 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுதிய 7,79,931 மாணவர்களில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவியரின்‌ எண்ணிக்கை 4,24,285 என்றும், மாணவர்களின்‌ எண்ணிக்கை 355,646 என்றும், அதில் பொதுப்‌ பாடப்பிரிவில்‌ தேர்வெழுதியோரின்‌ எண்ணிக்கை: 7,28,516 என்றும், தொழிற்பாடப்பிரிவில்‌ தேர்வெழுதியோரின்‌ எண்ணிக்கை: 51,415 என்றும் குறிப்பிடத்தக்கது
 
இதில் தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களின் சதவிகிதம்‌ 92.3% என்றும், மாணவியர்‌ 94.80 தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவர்கள்‌ 89.41% தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவியர்‌ மாணவர்களை விட 5.39%அஇகம்‌ தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மொத்தம் 7127 பள்ளிகள் இந்த தேர்வை எழுதிய நிலையில் அவற்றில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ எண்ணிக்கை 2120 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

அமைச்சரவையில் காங்கிரஸ்!. அழைப்புவிடுத்த தவெக!.. கிரிஷ் சோடங்கர் பேட்டி...

ஜீரோ ஊழல்!.. ஜீரோ கமிஷன்!.. தலைவர் சொல்லிட்டாரு!.. ஆதவ் அர்ஜுனா பேட்டி!..

வீட்டிலிருந்து கோட்டைக்கு 17 கி.மீ!.. டிராப்பிக்கில் தவிக்கும் சாமானியர்கள்!.. வீடு மாறுவாரா விஜய்?...

டில்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்!.. திருமணமான பெண் பேருந்தில் பாலியல் வன்கொடுமை!..

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலி.. தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு.. தேர்தல் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments