விரைவில் கடற்கரைக்கு பொதுமக்கள் அனுமதியா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (19:54 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் இன்று முதல் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேலும் சில தலைவர்கள் அறிவிக்க அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
குறிப்பாக ஆலயங்கள், பூங்காக்கள், மால்கள் திறக்கப்பட்டதை அடுத்து கடற்கரையிலும் விரைவில் பொதுமக்கள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
கடற்கரையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வசதியாக இருக்கும் என்பதால் கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என்று அரசு கருதுவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
எனவே சென்னை மெரீனா உள்பட கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதே தற்போதைய செய்தியாக உள்ளது

எல்லாம் காட்டு

போலீஸ் சிரிக்கவே கூடாதா?!.. காவல்துறைக்கு முட்டு கொடுக்கும் வன்னியரசு!..

ஆதவ் அர்ஜுனா மீது அதிருப்தியில் முதல்வர் விஜய்?!.. நடப்பது என்ன?...

எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.. பணிக்கு திரும்புங்கள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்...

இன்று டெல்லி செல்லும் விஜய்!.. யார் யாருடன் சந்திப்பு?!.. வாங்க பார்ப்போம்!..

10 வருடம் கழித்து இப்போது தான் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறோம்.. அம்மா உணவக பயனாளிகள் நெகிழ்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments