Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - ஓபிஎஸ்

Written By Sugapriya Prakash
Updated: சனி, 9 ஏப்ரல் 2022 (16:35 IST)
இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓபிஎஸ் உறுதிப்பட  தெரிவித்துள்ளார்.

 
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில், இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
 
நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூலக் காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது என்பதையும், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

தவெக எம்.எல்.ஏக்கள் மன்னர் பரம்பரை அல்ல!.. உதயநிதி Vs ஆதவ் அர்ஜுனா மோதல்!...

அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.. நெட்டிசன்களின் பதிவுகள் வைரல்..

2,500 நிரந்தர செவிலியர் பணியிடங்கள் .. தவெக அரசு அதிரடி அறிவிப்பு...

30 வயது இருந்தால் போதும்.. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் இலவசம்.. தவெக அரசு அதிரடி...

ஒரே ஒரு நாள் அமைச்சர்கள் தங்கள் குழந்தைகளை கிராமப்புற பள்ளிக்கு அனுப்பி பாருங்கள்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

அடுத்த கட்டுரையில்
Show comments