1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:39 IST)

ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு; விளைநிலங்கள் சேதம்

ஓஎன்ஜிசி குழாய் உடைந்த விளைநிலம்

திருவாரூர் மூலங்குடியில் விளை நிலத்தில் ஒ.என்.ஜி.சி. குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் விளை நிலங்கள் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

திருவாரூர் பகுதியில் ஓ.என்.ஜி.சி. குழாய்கள் உடைந்து விளை நிலங்கள் சேதமாவது குறித்து பலமுறை அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திருவாரூர் பகுதியில் கச்சா எண்ணெய் செல்லும் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.