மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: நெல்லை பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:58 IST)
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லையை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை என்ற பகுதியி உள்ள ஒரு பள்ளியில் படித்துவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
 
தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயகுமார் என்பவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பள்ளி தலைமை ஆசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டிய ஈபிஎஸ்.. 17 பேர் மட்டுமே வந்திருப்பதால் பரபரப்பு..!

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பையில் மொபைல் போன் வைத்திருக்க தடை.. தமிழக அரசு..!

ஆட்சிக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது.. அதற்குள் 60 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்..!

தமிழ்நாட்டில் இனி தொழில் முதலீடுகள் குவியும்.. சர்வதேச வர்த்தக வல்லுநர் கியுங்ஹூன் கிம் கணிப்பு..!

கோயில்களின் தங்க இருப்புகளுக்கு பதிலாக மத்திய அரசின் தங்க பத்திரங்கள்? உண்மை நிலை என்ன?

அடுத்த கட்டுரையில்