Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரஸுக்கு டெல்டான்னு பேர் வைக்கிறதா..!? – மய்யத்தார் கொந்தளிப்பு!

Written By Prasanth Karthick
Updated: புதன், 2 ஜூன் 2021 (10:30 IST)
இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என பெயர் சூட்டியுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் பிரமுகர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து உருமாறிய கொரோனா வேறு சில நாடுகளுக்கும் பரவியுள்ளது. அதை இந்திய கொரோனா என பலரும் அழைப்பது குறித்து இந்திய அரசு அதிருப்தி தெரிவித்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்தியாவிலிருந்து பரவிய உருமாறிய கொரோனாவிற்கு டெல்டா என பெயரிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி செயலாளர் பொன்னுசாமி ”உருமாறிய கொரோனாவிற்கு தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டாவின் பெயரை சூட்டுவதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் உலக சுகாதார அமைப்பு கிரேக்க மொழியில் இருந்த டெல்டா என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

ப சிதம்பரம் ஒரு உண்மையான நக்சல்.. அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்ச்சை பேச்சு...!

தமிழ்நாட்டில் விரைவில் 50 மாவட்டங்கள்.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..

திடீரென ரூ.22,000 விலை குறைந்த ஆப்பிள் ஐபோன் விலை.. லேட்டஸ்ட் விலை என்ன?

பொறியியல் கலந்தாய்வு 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிந்தது.. 88,930 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு...

சில முக்கிய ரயில்கள் இனி எழும்பூரில் இருந்து கிளம்பாது: தெற்கு ரயில்வே அறிவிப்பு.. முழு விவரங்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments