சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (17:33 IST)

நரிக்குறவர் சமூக மக்களுக்கு வீட்டுமனை பட்டா! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நரிக்குறவர் சமூக மக்களுக்கான வீட்டுமனை பட்டாக்களை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. தற்போது திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாளை மாமல்லபுரம் பூஞ்சேரி கிராம நரிக்குறவர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பட்டா வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.