Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவை எதாவது ஒன்னுன்னா பாம்பை விடுவோம்! – பழங்குடி மக்கள் ஆர்பாட்டம்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 22 நவம்பர் 2021 (15:47 IST)
ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக மதுரையில் பழங்குடி மக்கள் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜெய்பீம் பட சர்ச்சை தொடர்பாக இயக்குனர் ஞானவேலும் தனது வருத்தங்களை பதிவு செய்துள்ளார். தற்போது மதுரையில் பழங்குடி சமூகத்தினர் பலர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் செய்துள்ளனர். சூர்யாவுக்கு பலரும் மிரட்டல் விடுத்து வருவது குறித்து கோஷமிட்ட அவர்கள், சூர்யாவை ஏதாவது செய்ய நினைத்தால் அவர்கள் மீது பாம்பை விடுவோம் என பாம்பு, எலி முதலியவற்றை கையில் ஏந்தி ஆர்பாட்டம் செய்துள்ளனர்.

எல்லாம் காட்டு

சவுக்கு சங்கரின் மகன் தற்கொலையா?.... நெட்டிசன்கள் ஷாக்!...

Old Monk, Royal Challenger மதுபானங்களுக்கு தடை!.. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி.

ரூ.88 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண் கணவருடன் கைது... சிபிஐ அதிரடி நடவடிக்கை...

இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments