பகைக்கு வயது ஒன்று … பலிக்குப் பலி தொடரும் – மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர் !

திங்கள், 21 அக்டோபர் 2019 (08:45 IST)
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் அனுப்பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் நடந்த ஒரு தகராறில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமான குற்றவாளிகள் சிறையில் உள்ளனர்.

இது நடந்து ஒரு ஆண்டு முடிந்துள்ள நிலையில் இவரது நண்பர்கள் இப்போது ஒட்டியுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் ‘சிந்திய ரத்தம் வீண்போகாது. எதிரியை வீழ்த்துவது உறுதி. பகைக்கு வயது ஒன்று. பலிக்குப் பலி தொடரும்’ என எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் பகையை வளர்க்கும் பொருட்டு அவர்கள் நடந்து கொண்டுள்ளதாக போலிஸாருக்கு செய்தி வந்துள்ளது.

இதையறிந்து தலைமறைவான கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

ஜனநாயகன் படத்தை கிடப்பில் போட்ட கேவிஎன் நிறுவனம்!. விஜய் ஃபேன்ஸ் பாவம்..

உலகில் மீண்டும் காட்டாட்சி அபாயாம்!.. ரஷ்யா, சீனா நாடுகள் வார்னிங்!..

இப்பவும் சைலண்டாதான் இருப்பீங்களா?!.. தவெகவிடம் கேள்வியெழுப்பும் கனிமொழி!..

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை.. பாகிஸ்தானில் இன்னொரு மர்ம மரணம்..!

அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை ஆசிரமம் தான்: பிரசாந்த் கிஷோர் அதிரடி முடிவு...!

அடுத்த கட்டுரையில்
Show comments