Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருப்பு வளையத்தில் சூரிய கிரகணம்.. வெறும் கண்களால் பார்க்கலாமா??

Written By Arun Prasath
Updated: சனி, 21 டிசம்பர் 2019 (16:43 IST)
வரும் 26 ஆம் தேதி நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன், பூமி, நிலவு, இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரியனை நிலவு மறைக்கும். இதுவே சூரிய கிரகணம். வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது. இது நெருப்பு சூரிய கிரகணம் என்னும் அரிய வகை சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.

காலை 8 மணியில் இருந்து 3 மணி வரை இந்த சூரிய கிரகணம் தெரியும் எனவும், இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது எனவும் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் என்பவர் கூறியுள்ளார். இந்த கிரகணம் கோவை, அவினாசி, ஈரோடு, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட 10 இடங்களில் தெளிவாக தெரியும் எனவும், சென்னையில் பகுதி அளவே தெரியும் எனவும் கூறியுள்ளார்.

சூரிய கிரகணத்தை பார்க்க, மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments