சென்னை மெட்ரோவில் பயணம் செய்ய வந்த கூலித்தொழிலாளர்கள் தடுக்கப்பட்டார்களா?

Mahendran
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (16:52 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் கூலி தொழிலாளர்கள் பயணம் செய்ய வந்தபோது அவர்கள் தடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்தது.
 
இன்று காலை சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் சிலர் தங்களுடைய வேலைக்கான பொருட்களுடன் மெட்ரோ ரயில் பயணம் செய்ய வந்த போது அவர்கள் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. 
 
இந்த செய்தியை அடுத்து மெட்ரோ நிர்வாகத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்து மெட்ரோ நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளது. 
 
கட்டிட தொழிலாளர்கள் கூர்மையான பொருள்களுடன் வந்தார்கள் என்றும் மெட்ரோ ரயிலில் கூர்மையான பொருட்களுடன் பயணம் செய்ய அனுமதி இல்லை என்பதால் அவர்கள் தடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் கூர்மையான பொருள்களை துணி வைத்து மூடிய பின்னர் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments