Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பு மேல் தப்பு பண்ணும் ஓபிஎஸ்... ஜெயகுமார் காட்டம்!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 22 ஜூன் 2022 (13:57 IST)
ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழிக்கு ஏற்ப ஓ.பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. 

 
அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கூறி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி அதை மறுத்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறிய நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கும்படி உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ஓ.பன்னீர்செல்வம் தவறுமேல் தவறு செய்து வருகிறார். பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேராது என்ற எம்.ஜி.ஆர். பாடலை போல ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
 
ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழிக்கு ஏற்ப ஓ.பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும். தவறான பாதையில் ஓ.பன்னீர்செல்வம் பயணித்து கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்கள் உணர்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் மதிப்பு அளிக்க வேண்டும் எனம் ஜெயக்குமார் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட முடியாது: கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார்

தனுஷை சந்தித்த ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகி.. பின்னணியில் இருந்து வேலை செய்ய போகிறதா ஆர்.எஸ்.எஸ்?

கேரளாவில் கிளை ஆரம்பிக்கும் தமிழக வெற்றி கழகம்.. பிரபல நடிகர் தான் மாநில தலைவரா?

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து .. காஞ்சிபுரம் வர்த்தக சங்கத்தினர் கண்டனம்...

H-1B விசாவுக்கான கட்டணம் ரூ.99 லட்சம்!.. டிரம்ப் திட்டம்!.. இந்தியர்கள் அதிர்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments