பொறியியல் கல்லூரி விண்ணப்பத்தில் MBC (V) பிரிவு சேர்ப்பு!

செவ்வாய், 27 ஜூலை 2021 (14:17 IST)
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கி உள்ள நிலையில் நேற்று இரவு திடீரென தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இந்த அரசாணையின் படி பொறியியல் படிப்புகளுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து இன்று முதல் பொறியியல் கல்லூரி விண்ணப்பத்தில் இந்த அரசாணைக்கு ஏற்ப புதிய பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் MBC (V) என்ற புதிய பிரிவு இன்று முதல் சேர்க்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த சமூகத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு வன்னியர் சமூகத்தினர் மிக அதிக அளவில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

எல்லாம் காட்டு

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

திமுக எல்லாத்தையும் உடனே கொடுத்துட்டாங்களா?!.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் ஆதரவு...

எல்லாமே தெரிஞ்சவங்க ஒன்னுமே பண்ணலையே.. புதுசா வந்தவங்க கவனமாக இருப்பாங்க.. விஜய் அரசு குறித்து சமுத்திரக்கனி!

2 நாட்கள் டெல்லியில்!.. யாரையெல்லாம் சந்திக்கிறார் விஜய்?!... பரபர அப்டேட்...

அடுத்த கட்டுரையில்
Show comments