அனுமதி வாங்கினாதான் திறக்க முடியும்! – ஹோட்டல்கள், மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (08:17 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு, போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் திரையரங்குகள், திருமண மண்டபங்கள் திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகிய மக்கள் கூடும் இடங்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்ற பிறகே திறக்கமுடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணவும், தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்